சென்னை:"தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பொய் வழக்கு போடுவதில், ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக தனக்கு பிடிக்காதவர்கள் எவரையும் விடமாட்டார்.
காஞ்சி சங்கராச்சாரியார், தங்கள் மீது அ.தி.மு.க., ஆட்சியினரால் 2004ம் ஆண்டு போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என, கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறார். அவர்கள் மீதே இந்த நடவடிக்கை என்றால், அரசியல்வாதிகள் எம்மாத்திரம்?சென்னை ஆற்காடு சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவகக் காப்பாளர் முத்து, நீதிபதி ஒருவர் மருமகன் கஞ்சா வைத்திருந்ததாகவும், ஜெ.,வின் வளர்ப்பு மகன் சுதாகரன் "ஹெராயின்' வைத்திருந்ததாகவும் வழக்குகள் போடப்பட்டன.
கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே, சென்னையில் மேம்பாலம் கட்டியதில் தவறு என, என்னை நள்ளிரவில் கைது செய்தனர். இதே மேம்பாலங்களைக் காட்டி ஸ்டாலினை கைது செய்தனர்.இப்போது ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி, எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க, குற்றம் சுமத்திடும் செயலைத் துவங்கியுள்ளார்.இந்த வகையில் தான், அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பெரியசாமி, மதுரை மாவட்டச் செயலர் தளபதி மற்றும் கழகத்தினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு, விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239