பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெஷாவர் நகரில் நள்ளிரவில் கைபர் சூப்பர் மார்க்கெட் வளாகத்திற்குள் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
3 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து சிதறியதில் 34 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் அருகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் குண்டுகளை வெடிக்க செய்ததாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு உடனடியாக எந்தயொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்றவில்லை.
இதனிடையே தீவிரவாத தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239