தமிழக சட்டப்பேரவையில் புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக அவைத் தலைவர் செ.கு.தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையின் 14வது கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு கூடியது. அப்போது சாலை விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மற்ற புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக அவைத் தலைவர் செ.கு.தமிழரசின் பதவி பிரமாணம் செய்தார்.
பதவியேற்புக்கு பின்னர் தள்ளிவைக்கப்படும் அவை வரும் 27ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. அன்று அவைத் தலைவர், துணை அவைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
பின்னர் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. அன்று ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துகிறார்.
பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து ஜூன் 6ஆம் தேதி மீண்டும் கூடும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அந்த மாதம் முழுவதும் நடைபெறும் என்று தெரிகிறது.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239