சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைபடுத்த உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து டெல்லி சென்றார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் அங்குள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசின் மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது நாளை விசாரணைக்கு வருமா? என்பது தெரியவில்லை.
இதனிடையே தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து கடலூரை சேர்ந்த மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேஷ், மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை சங்கத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சமச்சீர் வழக்கில் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் மூலம் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க முடியும்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் கடந்தாண்டின் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நாளை முதல் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணிகள் தொடங்கும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239