ஆடம்பரம் வேண்டாம் : முதல்வர் ஜெ., வேண்டுகோள்

20/05/2011 18:57

அவரது அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்து பேராதரவு வழங்கியுள்ளனர். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களும், வெற்றி வாய்ப்பு இழந்த வேட்பாளர்களும், அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தெரிவிக்கும் பணி எளிமையாக நடைபெற வேண்டும். மேடைகள் அமைத்தோ, பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தோ நன்றி சொல்லும்  

சென்னை: "நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் எளிமையாக நடைபெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 

பணியை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அ.தி.மு.க., மீது மாபெரும் நம்பிக்கை வைத்து, மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.


ஒவ்வொரு தொகுதியிலும் எம்.எல்.ஏ.,க்கள் நன்றி தெரிவிக்கச் செல்லும் போது, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உட்பட்ட கிராமங்களுக்கும், நகர மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும், மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்களுக்கும், எம்.எல்.ஏ.,க்கள் நன்றி தெரிவிக்க வரும் போது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் நன்றி தெரிவிக்கச் செல்லும் போது, பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிவுடன் கேட்டறிந்து, அவற்றை தீர்த்து வைக்கும் வகையில் உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode