சென்னை: அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதாவில் 26(1) பிரிவில் எந்த மாநிலத்தில் அணைகள் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் வரும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டச்சிக்கலை உருவாக்கும். இது தமிழக நலனிற்கு எதிராக உள்ளது. தமிழகம் பராமரிக்கும் முல்லைப்பெரியாறு அணை, பரம்பிகுளம் அணை, துணாகடவு அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியவை கேரளாவில் உள்ளன. அணைகள் பாதுகாப்பு மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றினால் அது தமிழக நலனுக்கு எதிராக முடிந்து விடும். தமிழகம் பராமரிக்கும் 4 அணைகளும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும். இதனால் அணைகளை பராமரிப்பது, பாதுகாப்பது போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். அணைகள் அனைத்தும், அணைகளை பராமரிக்கும் மாநிலத்தின் வசம் வர வேண்டும். தற்போது பார்லிமென்ட் நிலைக்குழு வசம் இருக்கும் மசோதாவில் தேவையான மாற்றங்களை செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239